தம்பதியினர் மீது வீடு புகுந்து தாக்குதல்!!
களுத்துறையில் உள்ள வீடொன்றில் தம்பதியினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் களுத்துறை - ரேமுன பிரதேசத்தில் நேற்று (30) இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில், கணவர் படுகாயமடைந்து ஹொரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 58 வயதுடைய பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் வீடொன்றிற்குள் சென்ற நபர் பொல் மற்றும் கூரிய ஆயுதங்களினால் தாக்கியதாகவும், குடும்பத் தகராறே இந்தப் படுகொலைக்குக் காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தப்பி சென்றுள்ளார். அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை