நாளை முதல் வடக்கில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்!


 வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசியின் Booster Vaccine Dose வழங்கும் பணி நாளை ஆரம்பிக்கப்படும் என் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

மூன்றாவது அலகாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள போதனா மருத்துவனை, மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆதார மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி வழங்கும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்பட சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு முதல் கட்டமாக மூன்றாவது அலகு கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கப்படவுள்ளது.

அடுத்த கட்டமாக ஏனைய துறையினருக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.