அதிகரிக்கும் தொற்று - மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

 


இலங்கையில் கடந்த சில தினங்களாக அறிகுறியற்ற கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறதாக நாட்டின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு திறக்கபட்டு இரு வாரங்கள் நிறைவடைந்த நிலையில் மக்கள் கட்டுப்பாடற்ற பயணங்கள் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறிய செயற்பாடுவதே இதற்கு காரணமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் தற்போது அறிகுறிகள் அற்ற தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாகவும், எதிர் காலத்தில் நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

நாட்டில் தற்போது சகல பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுத்து நாட்டில் காணப்படும் நிலைமையை நன்றாக மதிப்பீடு செய்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான மூலக் காணரத்தை இனங்காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டு மக்களுக்கும் பாரிய பொறுப்பு காணப்படுகிறது. குறிப்பிட்ட அளவில் அதிகரித்த போக்கினை காண்பிக்கின்ற கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையை மீண்டும் குறைப்பதற்காக சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோருக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை. தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதால் நோய் அறிகுறிகள் தென்படுவதில்லை. இதனால் அறிகுறிகள் அற்ற தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் நாடு இது எதிர்காலத்தில் நெருக்கடியான நிலைமை உருவாகக் கூடும். காரணம் தற்போதும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத ஒரு தொகையினர் உள்ளனர். இவ்வாறான நிலையில் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் நாடு ஆபாய நிலைக்கு செல்லும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.