வாய் மூடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீட்பு!!!

 


வரகாபொல பிரதேசத்தில்  நபர் ஒருவரின் சடலம் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் நேற்று  (13) புதன்கிழமை மதியம் வரகாபொல துல்ஹிரிய பிரதேசத்தின் மாஓயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரின் வாய் பிலாஸ்டர் ஒன்றினால் மூடப்பட்டிருந்ததாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்து அடையாள அட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட அடையாள அட்டையில் இருந்த தகவல்களுக்கு அமைய கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த 10 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக அவரது மனைவி பன்னல பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 அரத்தன, உடுகம பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.