குளத்தில் பாய்ந்த சிறுவர்களில் ஒருவர் பரிதாப பலி!!

 


பிபிலை- மெதகம பெல்லன்ஓயாவுக்கு அருகில், மீன் வளர்ப்புக்காக அமைக்கப்பட்டிருந்த குளமொன்றில் விழுந்து 7 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவன் தனது 4 மற்றும் 11 வயதுடைய சகோதரர்களுடன், நேற்று மாலை 3.30 மணியளவில் பெல்லன்ஓயாவுக்கு நீராடச் சென்றுள்ளார்.

இதன்போது அதற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மீன் வளர்ப்புக்கான குளத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் , அங்கு வந்த தாயார் பிள்ளைக் கண்டு சத்தம் போட்டுள்ளார்.

 தாய்க்கு பயந்து பிள்ளைகள் மூவரும் குளத்துக்குள் பாய்ந்துள்ளனர். குளத்தில் சிறுவர்கள் இருவர் காப்பாற்றப்பட்ட நிலையில் 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சிறுவனின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.