தனியார் விடுதி ஒன்றில் நஞ்சருந்திய நிலையில் மூவர் மீட்பு!!

 


திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜவரோதயம் வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மூவர் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள் உட்பட சிறுவர் ஒருவருமே இவ்வாறு நஞ்சருந்திய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியிலிருந்து 29, மற்றும் 19 வயதுடைய இரு பெண்கள் மற்றும் இரண்டரை வயதுடைய மூவரும் திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் நேற்று தங்கியிருந்தனர்.

இந்நிலையில் , இருவரும் நேற்று காலை 11 மணி வரை கதவை திறக்காததன் காரணமாக விடுதி உரிமையாளர் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தல் வழங்கியுள்ளார். இதனையடுத்து குறித்த இடத்திற்கு வருகைதந்த பொலிஸாரால் மூவரும் மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் அவர்களில் இரண்டு பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். குறித்த நபர்கள் மதுவுடன் நஞ்சினை சேர்த்து அருந்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.