வைத்தியரை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்!!
இனந்தெரியாத போதை மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பாணந்துறை வடக்கில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பாணந்துறை கொரகபொல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய வைத்தியர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பிரதேசத்தின் பெற்றோர்கள் மற்றும் விஹாரதிபதிகள் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த கண்காணிப்புக் கடமைகளையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் பாணந்துறை பள்ளிய முல்ல பகுதியில் இவர் நடத்தி வந்த வைத்திய நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அடையாளம் தெரியாத 2,535 மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 4 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கைதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை