எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்க வாய்ப்பு!
எரிபொருள் விலைகளை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதுடன் ஓட்டோ டீசல் லீற்றரொன்றின் விலையையும் 5 ரூபாவினால் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒக்டென் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை