ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்!!

 


இந்தியாவின் ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் பலியாகியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலை அடுத்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் ராணுவ வீரர்கள் தொடர்ந்து தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

எனினும், வீரர்கள் உயிரிழப்பு குறித்து இந்திய ராணுவத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.