தலிபான் தலைவர் தற்கொலைப்படை தாக்குதலில் பலி!!


 கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், தங்கள் அமைப்பின் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடா (Hibatullah Akhundzada), கொல்லப்பட்டதாக, தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலிபான் அமைப்பை துவங்கிய முல்லா உமர் 2016ல் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதையடுத்து தலிபான் அமைப்பின் தலைவராக ஹிபத்துல்லா அகுந்த்ஸடா (Hibatullah Akhundzada) பொறுப்பேற்றார்.

எனினும் அவர் எப்படியிருப்பார், எங்கிருக்கிறார் என்ற விபரம் இதுவரை வெளியாகிவில்லை. ஆப்கனில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் ஹிபத்துல்லா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை தலிபான்கள் மறுத்திருந்தனர்.

இதற்கிடையே ஆப்கனை தலிபான்கள் கடந்த ஆகஸ்டில் மீண்டும் கைப்பற்றியதையடுத்து, ஹிபத்துல்லா (Hibatullah Akhundzada) வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும், அவரை பற்றி எந்த விபரமும் வெளியாகிவில்லை.

இந்நிலையில், தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினர் அமித் ஷேக் ''தலிபான் தலைவர் ஹிபத்துல்லா (Hibatullah Akhundzada) கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.