பயணக் கட்டுப்பாடு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

 


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயணக் கட்டுப்பாட்டு இன்று (31) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், மாகாணங்களுக்கு இடையில் தடையின்றி மக்கள் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama ) தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாகவே, பயணிகள் அழைத்து செல்லப்படவுள்ளனர். அத்துடன், ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை திங்கட்கிழமை சுமார் 152 ரயில்களை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர (Dhammika Jayasundara) தெரிவித்துள்ளார். இதேவேளை, சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.