இலங்கை தமிழருக்கு கனடாவில் கிடைத்த லொட்டறி அதிஷ்டம்!!

 


 கொரோனா தொற்று காரணமாக கனடாவில் தொழிலில் கடுமையாக பாதிக்கப்பட்டு தவித்துவந்த இலங்கைத்தமிழர் ஒருவருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.

கனடாவின் Barrie நகரில் வசிந்துவரும் பிரதீபன் சிவராசா(Pradeepan Sivarasa) (42)என்ற இலங்கை நபருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.

இதேவேளை, Lotto Max லொட்டரியில் பிரதீபன் சிவராசாவுக்கு $500,000 (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 9 கோடி) பணத்தொகை கிடைத்துள்ளது.

இதுகுறித்து பிரதீபன் சிவராசா தெரிவிக்கையில், கொரோனாவால் தனது ஊழியர்கள் வருமானத்தை இழப்பதை  விரும்பவில்லை என்றும் அதனால் தனது சொந்தச் செலவில் அவர்களுக்கு நிதியுதவி அளித்து வந்ததாகவும்  தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது லொட்டரியில் விழுந்த பணத்தை  வியாரத்தில் முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  லொட்டரியில் விழுந்த 9 கோடி என்னுடையது என்று என்னால் நம்பவே முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.