பிரித்தானியாவிலிருந்து பரவியுள்ள புதிய நோய்!!

 


பிரித்தானியாவிலிருந்து MIS-C என்னும் புதிய வகையான நோய் ஒன்று தற்போது இலங்கையில் பரவி வருகிறது.

இதயம்,நுரையீரல்,சிறுநீரகம், மூளை, தோல், கண்கள், மற்றும் ஏனைய உறுப்புகளை வீக்கமடைய செய்யும் கொடிய நோய் தான் இந்த MIS-C என்னும் நோய். இலங்கையில் தற்போது இந்த நோயினால் பாதிக்கப்பட்டு நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஐக்கிய இராச்சியத்தில் கண்டறியப்பட்ட இந்த நோயானது, ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் கண்டறியப்பட்டது.

இந்த நோய் குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறியதாவது, MIS-C நோயானது 19 வயது வைரையிலான பிள்ளைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு பிந்திய காலகட்டமான 2 முதல் 6 வாரங்களுக்குள் இந்த தொற்று ஏற்படலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பிள்ளைகளுக்கு தொற்று அறிகுறி தென்பட்டால் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.                             


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.