மக்கள் வங்கி சீன தூதரகத்தின் தீர்மானத்துக்கு அதிரடி பதில்!!
இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கருப்பு பட்டியலில் இணைத்துள்ளதாக அறிவித்தது.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. சீன தூதரகத்தின் தீர்மானத்துக்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் வங்கி விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி, கடன் நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக மக்கள் வங்கியை கருப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை