தவறைத் திருத்திக்கொண்ட பொலிஸ் அதிகாரி!!

 


யாழ்ப்பாணத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் காலணிகளுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரி தனதுதவறை திருத்தும் முகமாக நேற்று தொண்டமானாறு ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார்.

இது தொடர்பில் ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய முகநூல் பக்கத்தில் “கடந்த சில நாட்களுக்கு முன்பு எம் பெருமாள் ஆலயத்தினுள் பாதணிகளுடன் வருகை தந்தபொலிஸ் உத்தியோகத்தர் தான் செய்த தவறினை திருத்தும்முகமாக இன்று (15.10.2021) எம் பெருமாள் ஆலயத்துக்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தவறுகள் செய்யாத மனிதன் இல்லை அந்தத் தவறுகளைத் திருத்தாதவன் மனிதனே இல்லை” என செல்வச்சந்நிதியானின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த புதன்கிழமை காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கொட் டாச்சி என்பவர் காலணிகளுடன் வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி, வல்லிபுர ஆழ்வார் ஆலயங்களுக்குள் சென்றிருந்தார். அவரின் இந்த செயல் தொடர்பில் பலரும் கடும் விசனத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.