உயிரிழந்த மருந்துவரின் பிள்ளைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு!!

 


கொரோனா தொற்றினால் அண்மையில் உயிரிழந்த மருத்துவர் ஏலியந்த வைட்டின் மகள் மற்றும் மகனுக்கான பாதுகாப்புக்காக 21 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி நிரோஷன் பாதுக்க  தெரிவித்தார்.

அதன்படி பொலிஸ் மகளிர் பிரிவிலிருந்து 04 உத்தியோகத்தர்கள் உட்பட 21 அதிகாரிகள் இவ்வாறு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், அதற்காக அவர்கள் மிரிஹானை பொலிஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும் என்ன காரணத்திற்காக இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை உயிரிழந்த மருத்துவர் ஏலியந்த வைட் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட மருத்துவர் என்பது இங்கு  குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.