வருட இறுதியிலிருந்து 12 மணிநேர மின்வெட்டு!!

 


நாட்டில் வரும் டிசம்பர் மாதத்தின் பின்னர் 12 மணிநேர மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படாவிட்டால், சபுகஸ்கந்த கச்சா சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், 200 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் எனவும் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க ,நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டாலும் நாட்டின் மின்சாரத்தின் உற்பத்தியில் 45 வீத அளவு இழக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இப்படியே போனால், நாடு கண்டிப்பாக 12 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர் இதன்போது    கூறினார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.