சிறப்பு முகாம் இலங்கை கைதிகள் முக்கிய கோரிக்கை!!

 


திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கைதிகள், தங்களுக்கு விடுதலை பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதமொன்றினை குறித்த கைதிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாங்கள் 9 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்து, எங்களது கடவுச்சீட்டு காலாவதியாகிய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு,  திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்.

எமது விடுதலையை வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அந்தவகையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளோம்.

ஆகவே தடுப்புக் காவலில் இருந்து விடுதலை பெற்றுத்தருவதற்கு தேவையான நடவடிக்கையை உரிய அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள முன்வர வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.