ராகலை தீவிபத்து தொடர்பில் ஒருவர் கைது!!
நுவரெலியா – ராகலை முதலாம் பிரிவுத்தோட்டத்தில் நேற்றிரவு இடம்பெற்ற தீ விபத்து தொடர்பில் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடன் இதற்கு முன்னர் நெருக்கமாக இருந்தவர் எனக் கூறப்படுகின்ற ஒருவரே இவ்வாறு கைதாகியிருப்பதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் தீ விபத்து இடம்பெற்றதன் பின்னர் தலைமறைவாகியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில்,கைதான சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்திவருவதோடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் மற்றுமொரு நபரிடத்திலும் வாக்குமூலம் பதிவுசெய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை