சிறைச்சாலைகளில் சானிடைசர் தடை!!

 


சிறைச்சாலைகளில் சானிடைசர் திரவங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 ஈரான் கைதிகளில் சிலர் தொற்றுநீக்கி திரவத்தை (செனிடைசரை) அருந்தியதில் இருவர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து சிறைச்சாலைகளில் சானிடைசர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிறைச்சாலைகளை கைகளை கழுவுவதற்காக சானிடைசர்கள் இனி வழங்கப்படாது எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். எனினும் , அதற்குப் பதிலாக சவர்க்காரங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் கைதிகள் பார்வையாளர்களிடமிருந்து சானிடைசர்களை பெற அனுமதிக்கப்படுவதில்லை எனவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் வாரத்தில் ஒருதடவை சிறைச்சாலை வார்ட்களை சுத்தம் செய்வதற்காக தொற்றுநீக்கி திரவத்தைப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், ஆப்பணிகள் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் எனவும்சிறைச்சலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.