அரசிடம் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!!

 


அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க யாழ்.போதனா வைத்தியசாலை கிளை தலைவர் தி.பாணுமகேந்திரா தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தால் நேற்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போரோட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே தி.பாணுமகேந்திரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசிடம் ஏற்கனவே முன்வைத்த 7 அம்ச கோரிக்கையை விரைவுபடுத்தி தருமாறு கோரியே கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தோம்.

ஆகவே, எமது கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சும் அரசாங்கமும் உரிய தீர்வை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மாறாக  தீர்வு தராத பட்சத்தில் எமது போராட்டமானது மேலும் வலுப்பெற்று, தாய் சங்கத்தின் அனுமதியுடன் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து முற்று முழுதான போராட்டத்திற்கு விரைவில் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்.

ஆகவே  இந்த அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கு காலம் தாழ்த்தாமல் உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க உடனடியாக முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.