மக்கள் இலங்கையைவிட்டு வெளியேற ஆர்வம்!!

 


இலங்கையை விட்டு செல்பவர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதுவரையில் வெளியான தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் இருந்து வெளிநாடு செல்லும் நபர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்காக கடந்த 10 நாட்களில் 12 ஆயிரம் பேர் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த சில நாட்கள் முழுவதும் பத்தரமுல்லையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு அலுவலகத்தில் நீண்ட வரிசை ஒன்றை காண முடிந்துள்ளது.

கடவுச்சீட்டு அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களில் அதிகமானோர் இளைஞர் ,யுவதிகள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை அண்மைக்காலமாக இலங்கையில் வாழ்க்கை செலவு சடுதியாக அதிகரித்துள்ள அதேவேளை கொவிட் பரவல் காரணமாக இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பும் குறைவடைந்துள்ளன.

இந்நிலையில் வேலைவாய்பை தேடி இளைஞர்கள், யுவதிகள் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிப்பதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.