பண்டோரா ஆவணத்தில் தமிழ் அரசியல்வாதிகளுமா!!

 


உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பன்டோரா ஆவணத்தில் இலங்கையிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களும் சிக்கியிருப்பதாக மற்றுமொரு பரபரப்பு தகவல்  ஒன்று வெளியாகியுள்ளது.  

இந்த தகவல் கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகமொன்றில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவர் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி உட்பட பிரபல தொழிலதிபர்கள் பலரும் வெளிநாடுகளில் சொத்து சேர்த்த பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த ஆவணம் தொடர்பில் உள்நாட்டு வரிவருமானத் திணைக்களத்தின் கவனமும் திரும்பியிருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.