அமெரிக்காவிடம் வெனிசுலா ஜனாதிபதியின் நெருங்கிய உதவியாளர் ஒப்படைப்பு!!

 


பண மோசடி குற்றச்சாட்டுக்காக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அலெக்ஸ் சாப் என்ற குறித்த நபர் மதுரோவின் ஆட்சிக்கு ஒரு முன்னணி நபராக பணியாற்றினார் என அமெரிக்க கருவூலம் கூறுகிறது.

வன்முறை மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஒரு அரசியல் நெருக்கடியை தீர்க்க வெனிசுவேலா அரசாங்கம் அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நிறுத்தியது.

இந்நிலையில் இந்த வார இறுதியில் மெக்ஸிகோவில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

கொலம்பியாவில் பிறந்த தொழிலதிபரும் வெனிசுலா தூதருமான அலெக்ஸ் சாப், அமெரிக்க வங்கிகளில் தனது கணக்குகளைப் பயன்படுத்தி ஊழல் மோசடி செய்ததாக அமெரிக்க கருவூலம் குற்றம் சாட்டுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.