ஈரானிய கைதிகள் இருவர் தொற்று நீக்கி திரவம் அருந்தி உயிரிழப்பு!!

 


கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கொரோனா தொற்று நீக்கித் திரவத்தைப் பருகிய இரு ஈரானிய சிறைக் கைதிகள் மரணமடைந்திருப்பதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க (Chandana Ekanayake) தெரிவித்துள்ளார்.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கொரோனா தொற்று பரவல் ஏற்படாமல் இருக்க தொற்று நீக்கித் திரவத்தை பயன்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அங்கிருந்த தொற்று நீக்கித் திரவத்தைப்(disinfectant liquid) பருகி ஈரானிய சிறைக் கைதிகளில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.