வைத்தியசாலை சிற்றூழியர்கள் அடையாளப் போராட்டம்!!

 


நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் பணியாற்றும் சிற்றூழியர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை  6 மணியிலிருந்து 12 மணிவரை அடையாள போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிற்றூழியர்களும் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

அதாவது, இடை நிறுத்தப்பட்ட விசேட கொடுப்பனவான ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய் கொடுப்பனவை தொடர்ந்து வழங்க கோரியும் சீருடை கொடுப்பனவை அதிகரித்து வழங்கக் கோரியும் காணப்படுகின்ற ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரியும் கொரோனா தொற்று ஏற்பட்ட ஊழியர்களின் விடுப்பு அதிகரிக்க கோரியும் மேலதிக நேர கொடுப்பனவை அதிகரிக்க கோரியுமே இந்த போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிற்றூழியர்கள் கலந்து கொண்டு தமது கோசங்களை முன்வைத்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.