திடீரென யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர், பளையிலுள்ள தனது சகோதரி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ஆறுமுகம் ஞானக்குமார் எனும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பளை இத்தாவில் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றவர் இன்று காலை சடலமாக காணப்பட்ட நிலையில் பளை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், திடீர் மரணவிசாரணை, பீசிஆர் பரிசோதனை, உடற்கூற்று பரிசோதனை என்பன மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை