தங்க நாற்கரசாலை!!
என் சன்னலோரஇருக்கையில்
சாலையோர மரங்களை
எண்ணிக் கொண்டே
பயணப்படலானேன்
சிறுபிள்ளையாய்.
நிறுத்தங்கள் வரும் சமயம்
சற்றே ஓய்வு கிடைத்தது
எனக்கும் எண்ணிக்கைக்கும்.
பேருந்தின் மிதவேகம் கூடியதும்
தவறவில்லை எண்ணிக்கை.
எண்பது நூறென
சாலையைப் பிளந்து
பயணப்படுகிறது பேருந்து.
நான் எண்ணுவதற்கு
மரங்களற்றிருக்க கண்களை
மூடிக் கொள்கிறேன்.
அன்னிய தேசத்தின் சாலையில்
விரைந்து கொண்டிருந்தது
நான் பயணப்படும் பேருந்து.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை