சீனி பதுக்கும் வர்த்தகர்களால் நெருக்கடி!!


 நாட்டில் சீனி விலை நெருக்கடி சந்தையில் தொடர்ந்தும் நிலவிவருவதாக கூறப்படும் நிலையில் பல இடங்களில் வர்த்தர்கள் சீனியை பதுக்குவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக வியாபாரிகள் சீனி விற்பனை செய்வதாக மக்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதன்படி தற்போது கொழும்பில் மொத்த விலை 130 ரூபாய் என்றும் சில்லறை விலை நேற்று (12) வரை 138 ரூபாயாக உயர்ந்துள்ளதாக கோட்டை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 2 ஆம் திகதி, நுகர்வோர் விவகார ஆணையகம் வெளியிட்ட கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவிப்பின்படி வெள்ளைச் சீனியின் சில்லறை விலை 122 ரூபாய் மற்றும் ஒரு கிலோ பக்கெட் செய்யப்பட்ட வெள்ளை சீனியின் சில்லறை விலை 125 ரூபாய் ஆகும்.

இந்நிலையில் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் டொலர்கள் பற்றாக்குறையால் சீனி இறக்குமதி செய்ய முடியவில்லை என்று இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இறக்குமதியாளர்கள் உலக சந்தையில் ஒரு மெட்ரிக் டொன் சீனியின் விலை 550 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாகவும் அதன் விளைவாக ஒரு கிலோ சீனி துறைமுகத்தில் இருந்து 116 ரூபாய்க்கு வெளியிடப்படுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதேவேளை சீனி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரி இன்று முதல் இரத்து செய்யப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.