அமைச்சர் கெஹலிய இராஜினாமா செய்கின்றாரா!!

 


மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகவிருந்த மருத்துவர் பிரசன்ன குணசேனவின் பதவிவிலகலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப் பதவிக்கு சிறந்த ஒருவரை நியமிக்க ஒருமாதகாலம் தேவைப்படுவதாகவும் அதுவரை பதவியிலிருந்து விலக வேண்டாம் என்றும் ஜனாதிபதி கூறியிருப்பதாகவும் தெரியவருகிறது.

மருத்துவர் பிரசன்ன, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே பதவி விலக முடிவுசெய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் சுகாதார அமைச்சர் கெஹலிய அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்யலாம் அல்லது மாற்றப்படலாம் என்ற நிலைமைகூட வரலாம் என தகவல் கசிந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.