இன்று மேல் மாகாணத்துக்குள் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!!
மேல் மாகாணத்துக்குள் ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் ரயில் பயண பருவச்சீட்டு உள்ளவர்கள் மாத்திரமே ரயிலில் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மேல் மாகாணத்துக்குள் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, இன்று முதல் மேல் மாகாணத்துக்குள் மீள ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேநேரம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை