இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த மாற்று வழி உள்ளது பொ.கஜேந்திரகுமார் !
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமாயின் பாதுகாப்புச் சபையூடாகவே பாரப்படுத்த முடியும். பாதுகாப்புச் சபையில் சீனா இலங்கையை பாதுகாக்க veto அதிகாரத்தை பாவிக்கும் என கூட்டமைப்பு தொடர்ச்சியாக கூறிக் கொண்டு வருகின்றது.
பாதுகாப்புச் சபைக்கு போகாமல் இலங்கையை நேரடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த மாற்று வழி உள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கடந்த காலத்திலிருந்து தொடர்ச்சியாக கூறிவருகின்றார்.
அவர் கூறிவந்த பாதையூடாகவே இன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை