அணுசக்தி ஒப்பந்தம் - அமெரிக்காவிடம் ஈரான் கேள்வி!!

 


அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் விலக மாட்டோம் என அமெரிக்கா உத்தரவாதம் அளித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை வெற்றிபெறுமென ஈரான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு சபையின் செயலர் அலி ஷாம்கனி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
‘ஈரான் அணுசக்திப் பேச்சுவார்த்தையிலிருந்து மீண்டும் விலக மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தயாராக இல்லை. இந்த நிலை நீடித்தால், வல்லரசு நாடுகளுடன் வியன்னாவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனிக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.

ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது அவர் மீண்டும் விதித்தார்.

அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. இதனால் அந்த ஒப்பந்தம் முறிந்துபோகும் அபாயம் நிலவி வருகிறது.

அந்த ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்கான பேச்சுவார்த்தை வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஒஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.