இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீர் உயிரிழப்பு!!
குடும்பஸ்த்தர் ஒருவர் திடீர் சுகயீனமடைந்ததை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளசம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களாக குறித்த நபர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு குணமடைத்திருந்தார். இந்நிலையில் நேற்று திடீர் சுகயீனமடைந்த நிலையில் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அராலி மேற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தியாகராசா ஜெயரஞ்சன் (வயது 32) என்ற முன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை