பூநகரி வீதியில் வாகனம் தடம்புரண்டு விபத்து!!


பரந்தன் பூநகரி பிரதான வீதியில் இன்று மாலை கட்டுப்பாட்டை மீறி வாகனம் வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. வாகனத்தில் மூவர் பயணித்துள்ளனர் எனினும் இதில் குடும்பஸ்தர் ஒருவர் மட்டுமே காயமடைந்துள்ளதுடன் தெய்வாதீனமாக ஏனையவர்கள் காயங்களின்றி உயர் தப்பியுள்ளனர்.

மழை பெய்தபோது அதிக வேகமாகப் பயணித்த பட்டா ரக வாகனமே தடம்புரண்டுள்ளதாக ஆரம்ப கட்டவிசாரணையின்போது பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.