மட்டக்களப்பில் விபத்து!


மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் மதுபோதையில் தனது காரினை செலுத்திச்சென்றவரினால் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பார்வீதியில் இன்று பிற்பகல் கார் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு பார்வீதியில் பாடசாலை முடிந்ததும் மகனை ஏற்றிச்சென்றவரின் மோட்டார் சைக்கிளுடனேயே குறித்த கார் வேகமாக சென்று மோதியுள்ளது.

இதன்போது பாடசாலை மாணவனும் அவரது தந்தையும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது வீதியில் மறுபுறம் தனது பயணப்பாதையில் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீதே மோதியுள்ளது.காரை செலுத்திவந்தவர் மதுபோதையுடன் காணப்பட்டதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.