பாரவூர்தி வானுடன் மோதிய இருவர் உயிரிழப்பு!
பஸ்யால - கிரியுல்ல வீதியின் தன்சலேவத்த பகுதியில் வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், மதியகனே பகுதியைச் சேர்ந்த சந்தன பெரேரா( 47) மற்றும் மானெல் பத்திரன (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எதிரே வந்த வேன் மற்றும் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வேனின் சாரதியும் வேனின் பின்னால் பயணித்த பெண்ணும் உயிரிழந்துள்ளதுடன் சிறு குழந்தை உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை