மாந்தருக்கு வேண்டிய நற்குணங்கள்!!
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை 16:1-3 சுலோகங்களில், மனிதர்களிடமிருக்க வேண்டிய 26 தெய்வீகக் குணங்களை எடுத்துக் கூறுகிறார். அவை; 1. அபயம் – பயமின்மை/அஞ்சாமை
2. சத்வ சம்சுத்தி – நற்குணம் நிறைந்த தூய உள்ளம்
3. ஞானயோக வியவஸ்திதி – இறைவன் மற்றும் ஆன்மாவைப் பற்றிய அறிவை பெருக்கும் ஞானயோகத்தில் ஈடுபடுதல்
4. தானம் – தானம்/ கொடை
5. தமம் – அடக்கமுடைமை
6. யக்ஞம் – வேள்வி/ தியாகம் (ஈகை)
7. ஸ்வத்யாயம் – சமய நூல்களைக் கற்றல் (எ.கா. திருமுறை, பகவத் கீதை)
8. தபம் – தவம்
9. ஆர்ஜவம் – எளிமை (பகட்டைக் காட்டிக் கொள்ளாமல் இருத்தல்)
10. அஹிம்சை – இன்னா செய்யாமை (எந்த உயிரையும் துன்பப்படுத்தாமல் இருத்தல்)
11. சத்யம் – வாய்மை (உண்மைக்குப் புறம்பான சொற்களைப் பேசாமல் இருத்தல்)
12. அக்ரோதம் – சினங்கொள்ளாமை/வெகுளாமை (மூடத்தனமான காரணத்துக்காக கோபித்துக் கொள்ளாமல் இருப்பது)
13. தியாகம் – துறவறம் (பொருள்களின் மீது கொள்ளும் பற்றைத் துறத்தல்)
14. ஷாந்தி – அமைதி/பொறையுடைமை (பொறுமையாக இருத்தல்)
15. அபைஷுனம் – தீவினையச்சம் (துன்பம் விளைவிக்கும் தீயசெயல்கள், தீயசொற்கள் போன்றவற்றை தவிர்த்தல்)
16. தயை பூதேஷு – அருளுடைமை (எல்லா உயிர்களிடமும் கருணை காட்டுதல்)
17. அலோலுப்த்வம் – வெஃகாமை (பேராசை இல்லாமை; பிறர்பொருளைக் கவராமை)
18. மார்தவம் – பெருந்தன்மை/முரட்டுத்தனமில்லாமல் இருத்தல்
19. ஹ்ரீரம் – நாணுடைமை (ஆரவாரமின்றி அடக்க ஒடுக்கமாக இருத்தல்)
20. அசாபலம் – அசையா உறுதியுடைமை
21. தேஜஸ் – ஊக்கமுடைமை
22. க்ஷாமம் – மன்னிக்கும் குணம் கொண்டிருத்தல்
23. த்ரீதி – இடுக்கண் அழியாமை (எத்தகைய துன்பம் வந்தாலும், மனம்தளராமல் இருத்தல்)
24. ஷௌச்சம் – தூய்மை (உள்ளம், உடல், செயல் தூய்மை)
25. அத்ரோஹம் – அழுக்காறாமை (பொறாமை குணத்தில் இருந்து நீங்கியிருத்தல்)
26. அதிமானிதம் – புகழுடைமை (நல்லவர்கள் பழிக்கும்படி நடந்து கொள்ளக் கூடாது)
17. அலோலுப்த்வம் – வெஃகாமை (பேராசை இல்லாமை; பிறர்பொருளைக் கவராமை)
18. மார்தவம் – பெருந்தன்மை/முரட்டுத்தனமில்லாமல் இருத்தல்
19. ஹ்ரீரம் – நாணுடைமை (ஆரவாரமின்றி அடக்க ஒடுக்கமாக இருத்தல்)
20. அசாபலம் – அசையா உறுதியுடைமை
21. தேஜஸ் – ஊக்கமுடைமை
22. க்ஷாமம் – மன்னிக்கும் குணம் கொண்டிருத்தல்
23. த்ரீதி – இடுக்கண் அழியாமை (எத்தகைய துன்பம் வந்தாலும், மனம்தளராமல் இருத்தல்)
24. ஷௌச்சம் – தூய்மை (உள்ளம், உடல், செயல் தூய்மை)
25. அத்ரோஹம் – அழுக்காறாமை (பொறாமை குணத்தில் இருந்து நீங்கியிருத்தல்)
26. அதிமானிதம் – புகழுடைமை (நல்லவர்கள் பழிக்கும்படி நடந்து கொள்ளக் கூடாது)
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை