சடுதியாக அதிகரித்தது இந்தியாவின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!!
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்தாலும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 480 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 61 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதேநேரம் நேற்று ஒரேநாளில் 12 ஆயிரத்து 816 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 76 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும், நேற்று புதிதாக 12 ஆயிரத்து 331 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை