புத்தளம் , ஆரம்ப பாடசாலையில் கொரோனா தொற்று!!
புத்தளம், ஆனமடுவ ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நான்கு மாணவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனமடுவ பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன இந்தத் தகவலை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றுக்குள்ளான சிறுவர்களில் இரு சிறுவர்கள் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பாடசாலையில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஏனைய மாணவர்களைப் பாடசாலைக்கு வரழைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை