ஹையஸ் வாகனச்சாரதி திடீர் உயிரிழப்பு!!

 


கொழும்பிலிருந்து ஹையஸ் வாகனமொன்றில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த  போது, வாகனச்சாரதி திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அவர், கொடிகாமத்தில் சென்றுகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதும் வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் உடனடியாக அவர் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் இந்தச் சம்பவத்தில் வவுனியா வீரபுரத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை அன்ரன் ஜெயராஜ் (61) என்பவரே உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.   

            Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.