ரம்புகனையில் மண்சரிவு - 4 பேர் பரிதாபமாக மரணம்!


தொம்பேமட பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் கேகாலை, ரம்புக்கனை – தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து குறித்து தெரியவருவது, வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீட்டிலிருந்த நால்வரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்சரிவில் சிக்கிய வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நாட்டில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலை காரணமாகவே, இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.