மருத்துவபீட மாணவனின் மரணம் - வெளிவரும் உண்மைகள்!!
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் மரணம் தொடர்பிலான விசாரணைக் குழுவில் குற்றவாளிகளின் உறவினர், நண்பர்கள் இடம்பெற்றிருப்பதனால் முக்கியமான தகவல்கள் பல மறைக்கப்பட்டுள்ளதாக அவரின் சகோதரன் பிரதமர் மகிந்தராஜபக்சவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் 3வது வருட கல்வி கற்று வந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் என்ற இளைஞன் கடந்த 17.11.2020 அன்று அவர் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டு தூக்கிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை அப்போது கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த வீரசிங்க என்பவர் தற்கொலை எனக்கூறி எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை.
இது தற்கொலை அல்ல கொலை என அவரின் சகோதரனால் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், இராணுவத்தளபதி ஆகியோருக்கு அறிவித்ததன் விளைவாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (mahinda Rajapaksa) அவர்கள் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணித்திருந்தார்.
இந்நிலையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் நாம் தெரிவித்த பல விடயங்கள் மறைக்கப்பட்டமை தற்போது தெரியவந்துள்ளது.
அதற்கு காரணம் அவ் விசாரணைக் குழுவில் கொலையாளிகளின் உறவினர், நண்பர்கள் இருக்கின்றமை தற்போது தெரியவந்துள்ளது. எனவே அவர்களை நீக்கி விசாரணைகளை முன் கொண்டு செல்ல உதவுமாறு அவரின் சகோதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை