காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது!!


தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகே மணிக்கு 12 கிலோ மீற்றர் வேகத்தில் கரையை கடந்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சென்னையின் பலப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளதுடன், கடல் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.