கடும்மழையால் நீரில் மூழ்கியது விடத்தல் தீவு!!

 


மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் அதிகாலை விடத்தல் தீவு கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்துள்ளது.

இதனால் விடத்தல் தீவு கிராமத்தில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடுமையான மழைக் காரணமாக கடல் நீரானது கிராமத்துக்குள் புகுந்துள்ளது .

இதனால் குறித்த கிராமத்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் விடத்தல் தீவு மீனவர்களின் படகுகள் சில சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.