இன்றைய உதவி வழங்கல் நிகழ்வு!!

 


கனடா நாட்டில் வசிக்கும் குணரத்தினம் சுகேந்திரன்  (சுதா) என்பவர் இன்றைய தினம்  கல்மடுநகர் அ.த.க பாடசாலை  மற்றும் புதுமாத்தளன் அ.த.க வித்தியாலயம் ஆகிய பாடசாலையில் கல்வி கற்கும் 95 மாணவர்களுக்கு பாதணிகள், தண்ணீர் போத்தல்கள், தொப்பி,  பிஸ்கட்,  சொக்லேற் என்பவற்றை வழங்கியதோடு கல்மடுநகர் பாடசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தையும் வழங்கி வைத்துள்ளார்.  

சுமார் 350 000.00 பெறுமதியான இவ் உதவியினை கஸ்ரப்பிரதேச பாடசாலை மாணவர்களின் கல்வித் தரத்தினை முன்னேற்றும் வகையிலேயே அவர்  ஒழுங்கமைத்துள்ளார்.

அவரது சிற்றன்னை மற்றும் உறவினர்கள் முன்னின்று இவ் உதவியினை வழங்கி வைத்துள்ளனர். உதவியைப் பெற்றவர்கள் இவருக்கு நன்றிகளைத் தெரிவிக்கும் நிலையில் சமூக ஆர்வலர்கள் இவரது செயலுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 






























Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 















கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.