அத்துமீறி இலங்கைக்குள் நுழைந்த இந்திய இழுவைப் படகுகள்!


மாதகல் கடலில் அத்துமீறி இன்றைய தினம் இந்திய இழுவைப் படகுகள் உள்நுழைந்ததை காணக்கூடியதாக இருந்ததாக மாதகல் கடற்றொழிலாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, தாம் உடனடியாக மாதகல் கடற்படை பகுதியின் கட்டளைத்தளபதிக்கு அறிவித்ததாகவும், அவர்கள் தமது கடற்படை படகு கரையிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் நிற்பதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, அவர்களை கொண்டு விரட்டுவதற்கும் இயலுமாயின் கைது செய்வதற்குமான நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவித்ததாக கடற்றொழில் சங்கத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.