யாழில் மரம் முறிந்ததில் ஏற்பட்ட அசம்பாவிதம்!


யாழ்ப்பாண மாவட்டம் அராலி மத்தி பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்த பனைமரம் ஒன்று முறிந்து மின்சார வயரின் மீது விழுந்துள்ளது.

இச்சம்பவமானது இன்று (25) மதியம் காற்று அதிகமாக வீசியதால் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தினால் அருகில் இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கை மின்சார சபையின் வட்டுக்கோட்டை அலுவலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனயடிப்படையில், சம்பவ இடத்திற்கு வருகைதந்த மின்சார சபையினர் மின்னிணைப்பைச் சரிசெய்து சென்றனர். எனினும் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.