மாற்றப்பட்டது ஜெய் பீம் படத்தின் முக்கிய காட்சி!

 


இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் சிறந்த விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

கடந்த 1995 ஆம் ஆண்டு கடலூரில் நடக்கும் இப்படத்தின் கதையில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் காவல் நிலையத்தில் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்தும் அவரின் மனைவி பார்வதியின் சட்டப்பூர்வமான போராட்டம் குறித்தும் காட்டப்பட்டிருக்கும்.

இப்படத்தில் வரும் கொடுமைக்கார போலீஸ் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சார்ந்தவர் என்பது ஒரு காட்சியில் சித்தரிக்கப்பட்டமை பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது.

இதனிடையே தற்போது குறிப்பிட்ட அந்தக் காட்சியில் தீச்சட்டி உடன் உள்ள அந்த நாளிதழை மாற்றியுள்ளனர். அது இப்போ சாமி படம் உடைய நாட்காட்டியாக மாறியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.