புனித் ராஜ்குமாரின் பெயரைச்சூட்டி நெகிழ வைத்த வனத்துறை அதிகாரிகள்!

 


இந்தியாவின் கர்நாடகா சிவமோகா மாவட்டத்தில் உள்ள சக்ரேபைலு யானைகள் பயிற்சி முகாமில் பிறந்த குட்டி யானை ஒன்றுக்கு மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெயரை வனத்துறையினர் சூட்டியுள்ளனர்.

கடந்த மாதம் 29ஆம் திகதி பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், திடீரென்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவர் உடல் பெங்களூரு கண்டீரவா ஸ்டூடியோவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த புனித் ராஜ்குமாரின் மறைவு, கன்னட ரசிகர்கள் மத்தியிலும் இந்திய திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த மாதம் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள சக்ரேபைலு யானைகள் பயிற்சி முகாமுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் யானைகள் பயிற்சிப் பெறுவதைக் கண்டு ரசித்தார்.

அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அங்குள்ள குட்டி யானை ஒன்றுக்கு அவர் பெயரை சூட்டியுள்ளனர்.

நேத்ரா என்ற யானைக்குப் பிறந்த அந்தக் குட்டியை தாயிடம் இருந்து பிரிக்கும் நிகழ்ச்சியில், குட்டி யானையை வேறு முகாமுக்கு பிரித்து சென்றனர்.

புனித் ராஜ்குமாரின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த குட்டி யானையை அப்பகுதி மக்கள் செல்லமாக ‘அப்பு’ என்றழைக்கின்றனராம்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.